Monday, July 29, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 8

ஏழாவது ஆவரணம் 



கற்பகாம்பாள் சரஸ்வதி அலங்காரம் 










தாமரை மலர்ச் சடை 




சென்ற வருட அலங்காரம் 





ஊஞ்சல் மண்டபத்தில் நவதானியக் கோலம் 







மஹா மண்டபத்தில் திருவிளையாடற் புராண வரலாறு  



***************

ஏழாவது  ஆவரணம்

ராகம்: சஹானா                                                               தாளம்:திரிபுட

பல்லவி

ஸ்ரீ கமலாம்பிகாயாம் பக்திம் கரோமி
சிரித கல்ப வாடி காயாம் சண்டிகாயாம்  ஜகதாம்பிகாயாம்            (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

அனுபல்லவி

ராகா சந்த்ர வதநாயாம் ராஜீவ நயனாயாம்
பாகாரிநுத சரணாயாம் ஆகாசாதி கிரணாயாம்

மத்யமம்
ஹ்ரீம்கார விபிந ஹரிண்யாம் ஹ்ரீம்கார சுஸுசரீரிண்யாம்
ஹ்ரீம்கார தருமஞ்ஜர்யாம் ஹ்ரீம் காரேஸ்வர்யாம்  கௌர்யாம்     (ஸ்ரீ 
 கமலாம்பிகாயாம்)

சரணம்
ஸரீர த்ரய விலக்ஷண ஸுகதர ஸ்வாத்மாநு போகின்யாம்
விரிஞ்சீ ஹரீசான ஹரிஹய வேதித ரஹஸ்ய யோகின்யாம்
பராதி வாக்தேவதா ரூபவசின்யாதி விபாகின்யாம்
சராத்மக ஸர்வரோகஹர நிராமய ராஜயோகின்யாம்

மத்யமம்
கரத்ருத வீணா வாதிந்யாம் கமலா நகர  விநோதின்யாம்
ஸுர நர முநி ஜன மோதின்யாம் குருகுஹ வர ப்ராசாதிந்யாம்.    
     (ஸ்ரீ கமலாம்பிகாயாம்)

உலகத்திற்கே தாயாகவும், கோபத்தினால் சிவந்து உக்ரமுடைய சண்டிகை எனப்பெயர் உடையவளும், அடியவர்களுக்கு கற்பகச்சோலை போன்று கேட்ட வரங்களை கொடுப்பவளுமாகிய  கமலாம்பிகையை நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

முழுமதியை நிகர்த்த திருமுகத்தினள், கமல மலர் விழியாள், பாகன் என்ற அசுரனின் எதிரியான இந்திரன் வந்து வணங்கும் சரணங்களை உடையவள், ஆகாயம் முதலான பஞ்ச பூதங்களை தன்னுடைய பிரகாசத்தால் ஒளிர வைப்பவள், ஹ்ரீம் காரம் என்னும் நந்தவனத்தில்   திரியும் பெண் மான், ஹ்ரீம் என்கிற பீஜாக்ஷரத்தை தன்னுடைய மங்களகரமான சரீரமாக கொண்டவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரமாகிய மரத்தில் பூத்த மலர்போல் விளங்குபவள், ஹ்ரீம் என்ற பீஜாக்ஷரத்திற்கே ஈஸ்வரியானவள். பொன் நிறமான வடிவுடன் கௌரி என்று அழைக்கப்படுபவள், இத்துணை பெருமை மிக்க  ஸ்ரீகமலாம்பிகையின் மீது நான் பக்தி செய்து வணங்குகிறேன்.

ஸ்தூலம்-ஸூஷ்மம்-காரணம் எனப்படும் மூன்று வகையான மேனிகளுக்கப்பால்  ஆத்ம சரீரம்  ஆனந்தமயமான உள்ளது. அப்படிப்பட்ட ஸ்வாத்மனுபவ போகமே அன்னை. சாதகனின் சிரசிற்கு மேலனுபவத்தில் சூக்கு பரையாக விளங்குபவள்.

பிரம்மா ,விஷ்ணு, மஹேஸ்வரன், ஹயக்ரீவர்   முதலானோர் அறிந்துகொண்ட  ரஹஸ்ய யோகினி அவள், பரா-பஸ்யந்தி-மத்யமா-வைகரீ ஆகிய நிலைகளின் வாக்தேவியரின் ஸ்வரூபமான வசிநீ முதலான வாக் தேவியர்களாகவும்,  சக்தி தேவியர்களாகவும் பல வகையாகப் பிரிந்து இருப்பவளும் அவளே. சராத்மக பிரபஞ்  ரோகத்தை அழிக்கும்சர்வரோகஹர சக்கரத்தில் ஆரோக்கிய ராஜயோகினியாக விளங்குபவள்,

திருக்கரங்களில் வீணையை ஏந்தி இசைப்பவளும், கமலாநகரம் என்ற திருவாரூரில் பேரானந்தத்தில் திகழ்பவளும், தேவர், மனிதர், முனிவர்களை மகிழ்ச்செய்பவளும், குருகுஹனுக்கு வரங்கள் வழங்குபளான ஸ்ரீ கமலாம்பிகையை நான் எப்போதும் பக்தி செய்து வணங்குகிறேன்.


ந்த ஏழாம் ஆவரணத்தின் சக்ரம்  சர்வ ரோகஹர சக்ரம் ஆகும். இச்சக்ரம் எட்டு முக்கோணங்களாக (அஷ்ட கோணம்)  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராசித்தா. இதில் அட்டித்து விளங்கும் யோகினி ரகசிய யோகினி. அவஸ்தை மனனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் வாக் தேவியர்கள் எண்மர்  ஆவர். இக்கீர்த்தனத்தின் சிறப்புப் பலன்கள், விருப்பங்கள் ஈடேறும், ஹ்ரீம் பீஜத்தின் சக்திகள் கிடைக்கப்பெறும், ஆத்ம போதம் தெற்றென விளங்கும், வாக் தேவியர்களின்  அருளால் அறிவு நலம் மேலோங்கும்  நோய்கள் நீங்கும்,


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு



                                                                                                              அன்னையின் தரிசனம் தொடரும் . . . . . . 

Labels: , , ,

Wednesday, July 24, 2019

ஸ்ரீசக்ர நாயகி - 6

ஐந்தாம்  ஆவரணம்


திருமயிலை வெள்ளீச்சுரம் காமாக்ஷியம்மன்
காமதேனு வாகனத்தில் 
மஹா கௌரி அலங்காரம்







வெள்ளீச்சுரம் ஐதீகம்= சுக்கிரன்(வெள்ளி)
 ஈசனை வழிபட்டு  இழந்த கண்ணை பெற்ற தலம் 




காமாக்ஷியம்மன் சரஸ்வதி அலங்காரம் 



மீனாக்ஷி திருக்கல்யாணம்  கொலு


***************


ந்தாவது ஆவரணம்

ராகம்பைரவி                                                                                             தாளம்ஜம்ப

பல்லவி

ஸ்ரீ கமலாம்பாயாபரம் நஹி ரே ரே சித்த
க்ஷித்யாதி ஸிவாந்த தத்வ ஸ்வரூபிண்யா (ஸ்ரீ கமலாம்பயா)

அனுபல்லவி

ஸ்ரீ கண்ட விஷ்ணு விரிஞ்சாதி ஜநயித்ரியா:
ஸிவாத்மக விஸ்வ கர்த்ரியாகாரயித்ரியா: 

மத்யமம்
ஸ்ரீகர பஹிர்தஸார சக்ர ஸ்தித்யா ஸேவித
பைரவீ  பார்கவீ பாரத்யா  (ஸ்ரீ கமலாம்பயா)

சரணம்
நாதமய ஸூஷ்மரூப ஸர்வ ஸித்தி ப்ரதாதி 
தச ஸக்த்யாராதித மூர்த்தேஸ்ரோத்ராதி தஸ-கரணா
த்மக குல கௌலிகாதி பஹுவிதோ பாஸித கீர்தே:
அபேத நித்ய ஸுத்த புத்த முக்த ஸச்சிதாநந்த மய
பரமாத் வைதஸ்பூர்தே:
ஆதி மத்யாந்த ரஹித அப்ரமேய குருகுஹமோதித
ஸர்வார்த்த ஸாதக பூர்த்தே:

மத்யமம்
மூலாதி நவாதார வ்யாவ்ருத்த தஸத்வநி
பேதஜ்ஞ யோகி ப்ருந்த ஸம்ரக்ஷண்யா: 
அநாதி மாயா-வித்யா கார்ய காரண விநோத
கரண படுதர கட‌க்ஷ வீ‌க்ஷண்யா (ஸ்ரீ கமலாம்பாயா) 
ஓ மனமே!  பூமிதத்வம் முதல் சிவதத்வம் வரையான தத்வங்களின் ஸ்வரூபமாக விளங்குபவளானஸ்ரீ கமலாம்பிகைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் இல்லைஅவள்தான்  நீலகண்டன்விஷ்ணு,பிரம்மாமுதலியவர்களை படைத்தவள்அவள்தான் சிவமயமான இப்புவனங்கள் அனைத்தையும்  படைத்துஇயங்கச்செய்பவள்.   பத்து இதழ்கள் உள்ள பஹிர்தசார சக்ரத்தில்உறைபவள்இச்சக்ரம் அனைத்து ஐஸ்வர்யங்களையும் அருள வல்லது. அவளை  லக்ஷ்மி,சரஸ்வதிபைரவி ஆகியோர் துதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பேற்பட்டவளான ஸ்ரீகமலாம்பிகையை விட மேலான தெய்வம் வேறு கிடையாது.

அணிமா மற்றும் அஷ்டமாசித்திகளை அருளுபவள்,  அவளை நாதமய சூக்க்ஷரூபமாகசர்வசித்திப்ரதா முதலான பத்து சக்தி தேவியர்கள் ஆராதித்துக் கொண்டிருக்கிறார்கள், அத்தகைய   மூர்த்தியாகயுள்ள அவளைக் காட்டிலும் வேறு மேலான தெய்வம் கிடையாது.

 கண் காது முதலாம் ஐந்து  ஞனேந்திரியங்கள்வாக்கு முதலான ஐந்து கர்மேந்திரியங்கள் ஆக பத்துஇந்திரியங்கள் சொரூபமானவள்குலகௌலீனி சக்தி தேவியரால் பல்வகையான உபாசனைசெய்யப் பெற்ற புகழை உடையவள்பேதங்களற்றஅழிவற்றமாசுகளற்றஞானஸ்வரூபமான, மாயையிலிருந்து விடுபட்டசச்சிதானந்தமானமேலான அத்வைதத்தின் எழுச்சியாக இருக்கும்அவளைக் காட்டிலும் மேலான தெய்வம் வேறொன்றும் இல்லைஅவள் தோற்றம் முடிவு முதலான அளவுகளுக்கு அப்பால் இருப்பவள்,  குருகுஹனை ஈன்று மகிழ்ச்சியடைந்தவள்,அனைத்து புருஷார்த்தங்களையும் நிறைவேற்றுபவள்.

 மூலாதாரம் முதல் தொடங்கி ஒன்பது ஆதாரங்களால் சுற்றப்பட்டவள்பத்து விதமானநாதங்களையும் அவற்றிற்குண்டான வேறுபாடுகளையும் அறிந்த யோகியர் கூட்டத்தைகாத்தருள்பவள்என்று தோன்றியது என்றே சொல்ல முடியாத மாயையின் வடிவானஅஞ்ஞானத்தின் காரிய காரணங்களை விலக்குவதற்கு மிகவும் திறமை வாய்ந்த கடைக்கண் பார்வைஉள்ளவளான அந்த ஸ்ரீ கமலாம்பிகையைவிட மேலான வேறு தெய்வம் இல்லை இல்லை இல்லவேஇல்லை என மனமே! புரிந்து கொள்.


இவ்வைந்தாம் ஆவரணத்தின் சக்ரம் ஸர்வார்த்த சாதகம் ஆகும். இச்சக்ரம்  வெளி பத்து முக்கோணங்களாக  விளங்குகின்றதுஇச்சக்கரத்தின் நாயகி திரிபுராஸ்ரீ. இதில் அட்டித்து விளங்கும் யோகினி குலோத்தீர்ண  யோகினி. அவஸ்தை குருபஸ்தனம் ஆகும். இதில் விளங்கும் தேவதைகள் சர்வகாமப்ரதா  முதலான பதின்மர் ஆவர். சர்வார்த்த சாதக சக்ரம் என்பதால் எல்லா புருஷார்த்தங்களும்  நிறைவேறும்.


முந்தைய பதிவு                                                   அடுத்த பதிவு

Labels: , , ,

  • Other Articles
  • Unicode enable