Saturday, October 13, 2007

Navarathri # 5 ( Amman's Kolu in different temples)

அன்னையின் அருட்கோலங்கள்(2007)


Meenakshi Alangaram ( Ashok Nagar Sornambika)
அசோக் நகர் சொர்ணாம்பிகை மீனாக்ஷி அலங்காரம்







Sornambaika Alangaram
சொர்ணாம்பிகை


Gajalakshmi Alangaram ( MAhalingapuram)
கஜலஷ்மி அலங்காரம்
பிரகத் சுந்தர குஜாம்பாள் வேங்கீஸ்வரம்

Srinivasar ( Vengeeswarm)
வெங்கடாசலபதி கொலு

Special Shiva Kolu சிவ பெருமான் தனிக் கொலு
வேங்கீஸ்வரம்

Murugan Kolu குன்றின் மேல் குமரன்
வேங்கீஸ்வரம்

Thursday, October 11, 2007

Navarathri # 4 ( Sornambika Navaratna Malai)


சொர்ணாம்பிகை  நவரத்ன மாலை

ஆக்கும் மணி மாலை ஆணை முகன் தாள் பணிந்து
கோக்கும் படி சிந்தை கூடுவாம் - பூக்கும்
நற்குடி வாழ் நனி நல்ல திருக் காரணிப்
பொற்கொடி சூடும் பொருட்டு.

மாணிக்கம்

நிழலாய் விளங்கி நின்றென்றும் நினையே நெஞ்சில் நினைவேற்கு
நிதியாய் நோற்றுப் பணிகின்ற நிட்டை நிதஞ்சேர் நான்முகியே
குழகன் அணியுங் கொன்றைத்தார்க் குழலாய் கோலத்தொழிலோடு
குறையில் மாணிக்கமே சூட குன்றாக் குழையைக் கொண்டனையோ
வழகார் இதயம் வாழ்கின்றாய் வரையோன் பெற்ற வார்ச் சடையாய்
வளங்கொள் நின்றன் விளையாட்டின் வண்ணம் உலகாம் வான்முகிலே
அழகார் மதுரை மீனாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.


முத்து
பணிகொள் கற்றைப் புனற் குழலாய் பசுவேன் போற்றும் பாங்குடையாய்
படரும் ஞானத் திருநீற்றால் பாசந் தொடராப் பார்ப்பதியே
பிணி கொள் வாழ்வைத் துறப்போரின் பிறப்பைப் போக்கும் பிஞ்சகியே
பிறையை சூடும் பெருமாட்டி பீடத்தமரும் பூங்கொடியே
மணிகொள் கண்டன் அணிகின்ற மயிலே முத்தே மாமையளே
மடங்கொள் அனமே மலைச் செல்வி மட்டில் முகிழ்த்தாய் முரலுற்றே
அணிகொள் தில்லைச் சிவகாமி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே




பவளம்துறவோ ரென்னும் ஞாயிற்றைத் துணையா யீந்த தேமொழியே
துதிக்குந் திங்கள் அணிக் துன்பங்களையுங் து‘யவளே
பிறவா தென்றும் வாழ்கின்ற பிடியே செவ்வாய்ச் செம்பவளம்
பிறங்கும் போதப் பொருள் தந்தே பித்தன் பரவும் அற்புதமே
மறவேன் ஞானந் தந்தென்றும் மயல் தீர்த்தாளும் நற்குருவை
மதிக்கும் வாழ்வே விடி வெள்ளி மாவாய்ச் சனியேன் நின்னருளால்
அறவோர் காஞ்சி காமாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.



மரகதம்
மடியாய் மாளும் வகை தந்து மயலார் நீங்குந் தன்மை தந்தாய்
மதங்கொள் வேகங் கெடுத்தாளும் மன்னோர் மரையே மாதவமே
மிடியார் மாளும் நிலை தந்து மிகைகொள் அச்சம் போக்கியருள்
மிளிரும் வண்ண மலர்ப்பாதம் மின்னேர் மணியே மரகதமே
துடியார் தையால் துரியத்தே துணையாய் தோன்றும் தண்ணளியே
துதிசெய் நெஞ்சந் திகழ்கின்றாய் தொன்னேர் நெறி கொள் தோத்திரத்தாய்
அடியார் ஆரூர்க் கமலாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே.


பத்மராகம்
நமனை நசுக்கும் நாதகீதம் நயந்து நானும் பெற்றிடவே
நலங்கொள் ஞாலந்தெளிவிக்கும் நல்லாய் நடங்கொண் டாடுகின்ற
குமர மணியைக் குன்றமுறுங் குறவர் கோவை நித்தியத்தை
குருவாய் யீந்தாய் குணக்குன்றே குன்றாக் கனகக் குண்டலியே
வெமர வணியும் வார்குழலில் வெதும்பா வண்ணப் பத்மராகம்
வெளியேன் சூட்ட விழைகின்றேன் வெள்ளை உளஞ்செய் வாலையளே
அமரர் கயிலைப் பார்வதியே அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


வைரம்உரனார் உள்ளம் உவந்தீயும் உரகம் ஆடும் வார்ச் சடையாய்
உவணம் ஊர்ந்தோ னிளையோளே ஊழை ஒறுத்தாய் உத்தமியே
சுரனாய் வாழுஞ் சுகம் வேண்டேன் சுடரும் வைரம் தேர்ந்தணியாய்
சுவையூ றொலிகொள் நுகரேசை சூழும் புலன் சேர் சூலியளே
நரனாய் என்றும் பிறப்புற்றால் நலமே நின்னை யேத்திடவே
நவையில் ஞானம் நயந்தேற்கு நல்கும் நடனார் நாயகியே
அரனார் காசி விசாலாட்சி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே



நீலம்
உமிழ்ந்தாய் உலகம் பதினான்கை உவக்கும் வண்ணம் ஒண்ணுதலே
உறவாந் தாய்நீ மகவேனிம் உள்ளம் உறையும் உட்பொருளே
இமிழ்ந்தார்த் தெழும்புங் கடல் நீலம் இழையச் சூடும் நன்மணியே
இகங்கொள் வாழ் வின் இயல்பாகும் இன்னல் கலைளயும் இன்னமுதே
தமிழ்ப்பா வளித்துத் தெளிவித்தாய் தனயன் தேருந் தாயலவோ
தனஞ் சேர் தான்யம் தருகின்றாய் தண்டாமரையே தாழ்குழலே
அமிழ்தக் கடவூர் அபிராமி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே



கோமேதகம்
சிலையை யெடுத்த மன்மதனைச் சினந்து சுட்ட சங்கரனார்
சிறிதும் ஆலம் விழுங்காதே சித்தஞ் செய்தநற் சங்கரியே
மலையை யெடுத்த மாவரக்கன் மதத்தோள் நைய ஊன்றியதுன்
மலராய்த் தோன்றும் பதமென்று மறைகள் மொழியும் மேன்மையளே
கலையைக் கொழிக்கும் தண் கதிரின் கவிணைக் கூறாய் கூன்பிறையைக்
கனிந்தே சூடும் கலாவல்லி கோமே தகங் கொள் கோகிலமே
அலைசூழ் மயிலை கற்பகமே அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


வைடூரியம்
நளிகொள் நின்னை நாடுகின்ற நசையை யென்றும் நல்கிடுவாய்
நடஞ்செய் கோனை நினைவார்க்கு நாளும் நிறைசேர் நாரியளே
களிகொள் உள்ளந் தூய்மையுறக் கருணை தந்தீர்த் தாள்பவளே
கனலும் மண்ணும் குளிர்கின்ற காற்றும் புனலும் கூடுகின்ற
வெளிகொள் பஞ்ச பூதமுறும் வினையேன் வாழ்வில் வாழ்பவளே
விரைகொள் பாதாம் புயத்தாளே வைடூரியங் கொள் வைணவியே
அளி கொள் நெல்லை காந்திமதி அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே
அடிமை கொண்டாய் அருள்வாமி அன்னாய் சிவசொர் ணாம்பிகையே


நூற்பயன்:
பத்தியால் அன்றிசேர் சொற்காகி பாங்கொடே
உத்தியால் செய்திடா ஒண்மணிமாலையாய்
கத்திடுங் கார்கடல் சூழுல காள்பவர்
நித்தமும் நாரி கொள் நெஞ்சினால் நல்லவரே.



* * * * * * *

Wednesday, October 10, 2007

Navarathri # 3 ( Sri Chakram)


ஸ்ரீ சக்ரம்

பிந்து-த்ரிகோண-வஸுகோண-தசாரயுக்ம-
மன்வச்ர-நாகதல-ஸம்யுத-ஷோடசாரம்
வ்ருத்தத்ரயம் ச தரணீஸதனத்ரயம் ச
ஸ்ரீசக்ரமேத- துதிதம் பரதேவதாயா


பிந்து, முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினாலு கோணம், எட்டுத்தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று கோட்டுப் பூபுரம் என்றவைகளாகிய இது பரதேவதையின் ஸ்ரீ சக்கரம் ஆகும்.

காலடியிலே பிறந்து நமது இந்து சமயத்திற்கு புத்துயிர் ஊட்டிய மகான் ஆதி சங்கரர், இம்மதத்தை அவரவர்கள் வழிபடும் முழுமுதற் கடவுளை பொறுத்து ஆறு உட் பிரிவுகளாக அமைத்தார், அவையே " அறு சமயங்கள் " என்று வழங்கப்படுகின்றன. அவையாவன சைவம், வைணவம்,சாக்தம், காணபத்யம்,கௌமாரம்,சௌரம் ஆகும்.


இவற்றுள் சாக்தம் தேவி வழிபாடு ஆகும். ஆதி பராசக்தியே தன் சக்தியினால், அண்ட சராசரங்கள் மற்றும் சகல ஜ"வராசிகளையும் படைத்தவள். பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தாயினாலேயே தோற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்களுடைய தொழிலை செய்வதற்க்கு சக்தி தருபவள் ஆதி பராசக்தி அன்னையே என்பது சாக்தர்களின் நம்பிக்கை. ஆதி சங்கரரும் இதை தமது சௌந்தர்ய லஹரியில் இவ்வாறு கூறுகின்றார்,


" ஓ பகவதீ! பிரும்மா மிக ஸ்வல்பமான உமது பாதாரவிந்த தூளியை வைத்துக் கொண்டு தனித்தனியாக 14 லோகங்களையும் படைக்கிறார். விஷ்ணுவும் அப்படியே ஆயிரம் தலைகளால் அதை வஹ’க்கிறார். ஹரனும் உலகைக் கொளுத்தி, சாம்பலால் விபூதியாக அணிகிறார்."


இதையே அபிராமி பட்டர் தமது அபிராமி அந்தாதியிலே

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறை கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே


என்று இந்த பதினான்கு லோகங்களையும் படைத்தவளும்,பின் அவற்றை காப்பவளும் அபிராமி அம்மையே என்றும், சக்தி வழிபாடு, சதாசிவ வழிபாட்டிற்கு முந்தையது, என்றும் கூறுகின்றார்.

பராசக்தியே பஞ்ச் க்ருத்ய பராயணை , இதை குறிக்கவே ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரியாக அவள் இருக்கையில் பஞ்சப் பிரேத மஞ்சத்தில் வீற்றிருக்கின்றாள். இந்நிலையில் ஐந்தொழில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவராக அவள் நியமித்துள்ள கடவுளரில் நால்வர் அவளது மஞ்சத்தின் நான்கு கால்களாகவும், ஐந்தாமவர் அவற்றின் மீது அவள் அமரும் பீடப் பலகையாகவும் இருக்கின்றனர். படைக்கும் பிரம்மன், காக்கும் மாலவன், அழிக்கும் ருத்ரன், (மாயையால்) மறைக்கும் மஹேச்வரன், (மாயை நீக்கி ஸத்ய மோக்ஷ நிலையை அருளும் ஸதாசிவன் என்ற ஐவரும் சக்தி மூலமான அவளால் இயக்கப்படாவிட்டால் செயல் மரத்துப் போன மரக் கால்களும், பீடப் பலகைகளாகவும் மரித்த நிலையிலேயே உள்ளனர். அதனால்தான் பன்ஹ்ச பிரேத மஞ்சம் என்பது லலிதை ஒருத்தியே அவர்களுக்கு உயிர் பெய்து அவர்கள் மூலம் பஞ்ச க்ருத்யங்களை புரிகின்றாள். இத்தனை தொழிலையும் தானொருத்தியே புரிவது தனக்கு லவலேசமும் ஆயாஸமில்லாதே லலிதமான லீலையே என காட்டத்தான் "லலிதா" என்றா பெயர் கொண்டிருக்கிறாள் என்பது சாக்தர்களின் கொள்கை. சாக்தர்கள் அன்னையை ஜகத் ஜனனி, ஜகதம்பாள், புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, ஸ்ரீ லலிதா என்று பல வடிவங்களில் வழிபடுகின்றனர். தாயை வழிபடுவது சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இருந்துள்ளது. தேவியை வணங்குபவர்கள், ஸ்ரீ சக்ரம்(ஸ்ரீ யந்திரம்) மற்றும் மேருவிற்க்கு பூஜை செய்கின்றனர். குறிப்பாக தேவி உபாசகர்களும், தாந்த்ரீகர்களும் ஸ்ரீ சக்ர பூஜை செய்கின்றனர்.

ஸ்ரீ சக்ரம் 1000 இதழ் தாமரையில் விளங்கும் சாட்சாத் ஆதி பராசக்தியினுடைய ரூபம் ஆகும். இதனை பிரதி தினமும் பூஜை செய்ய தேவியினுடைய அனுகிரகத்தினால் சகல மந்திர தந்திர சக்திகளும், அட்டமா சித்திகளும், ஸர்வ லோக வசியம், ராஜ வசியம், வியாபார, பொன் பொருள் விருத்தி, நவக்கிரக தோஷ நிவர்த்தி, நோய் நிவர்த்தி, பேய், பிசாசு, சத்ரு உபாதை நீங்கி சர்வ மங்கள காரியங்களும் கை கூடும் என சௌந்தர்ய லஹரியிலே ஆதி சங்கரர் கூறுகின்றார்.





ஸ்ரீ சக்ரத்தில் ஒன்பது முக்கோணங்கள் உள்ளன, அவற்றுள் நான்கு மேல் நோக்கி உள்ளன, இவை தேவியின் சக்தியை குறிக்கின்றன. ஐந்து முக்கோணங்கள் கீழ் நோக்கி உள்ளன இவை சிவ பெருமானை குறிக்கின்றன, இவை அறிவை குறிப்பிடுகின்றன. இந்த ஒன்பது முக்கோனங்களும் இணைந்து 43 சிறு முக்கோணங்கள் உருவாகின்றன. நடுவிலுள்ள சிறு முக்கோணமே பிந்து எனப்படுகின்றது. இது சிவ சக்தி ஐக்கியத்தை குறிக்கின்றது. 43 முக்கோண்ங்களிலும் தேவதைகள் வசிக்கின்றனர். சிவ சக்தி ஐக்கியமான பிந்துவிலிருந்து சகல அண்ட சராசரங்களும் உற்பத்தியாகி வருவதை இச்சக்கரம் குறிக்கின்றது.



ஆதி சங்கரர் தனது சௌந்தர்ய லஹரியில் அம்மையின் இருப்பிடமாக விளங்கும் ஸ்ரீசக்ரத்தை இவ்வாறு வர்ணிக்கின்றார்,

சதுர்பி: ஸ்ரீகண்டை ஸலவயுவதிபி: பஞ்சபிரபி

பிரபின்னாபி ஸஸம் போர் நவ பிரபி மூலப்ரக்ருதிபி:

சதுஸ்சத் வாரிம் ஸ்த்வஸ"தள களாஸ்ரத்ரிவலப

த்ரி ரேகா பிஸ்ஸார்தம் தவ சரணகோணா: பரிணதா

பகவதி! சிவ வடிவமான நான்கு சிவசக்ரங்களாலும், நான்கு விதமான சிவ த்ரிகோணங்களை காட்டிலும் வேறு பட்டதான ஐந்து சக்தி சக்ரங்களாலும் ஒன்பது மூல ப்ரக்ருதிகளுடன் உம்முடைய சரணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று மேகலை, நான்கு திக்கிலும் த்வாரமுள்ள பூபுரம் மூன்றுகளோடு கூடினதாக அமைந்து 44(43) தத்வங்களாக விளங்குகின்றன.





அபிராமி அந்தாதியிலே அபிராமி பட்டரும் " ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே" என்று அம்மையின் இருப்பிடமாக ஸ்ரீசக்ரம் விளங்குவதைக்   கூறுகின்றார்.

அவயவ ரூபியான அம்பிகைக்கும் யந்திர ரூபத்திலுள்ள ஸ்ரீ சக்ரத்துக்கும் அணுவளவும் பேதமில்லை. அவயவ ரூபத்தையும் யந்திர ரூபத்தையும் ஆசார நெறிகளோடு அன்பு கலந்தே உபாஸ’க்க வேண்டும்.

பல தேவி ஆலயங்களிலே ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது அவற்றுள் சில :

காஞ்சி காமாஷியம்மன் ஸ்ரீ சக்ரம்

ஆதியிலே பண்டகாசுரனை அழித்து தேவர்களை பிலத்தே அம்மை காத்த போது, தேவி தானே இங்கு கோவில் கொண்டாள். தேவர்கள் அக்கோவிலை செம்பொற் கோவிலாக எடுத்தனர். பின் யுகங்களில் அது கருங்கற் கோவிலாயிற்று. பந்தகனை புதைத்த இடத்தில் ஜயஸ்தம்பம் உருவாக்கினர். ஜயச்தம்பத்திலிருந்து பிலாகாசத்துக்கு வாயில் எடுத்தனர். காயத்ரீ கதிர்கள் பரவிய எல்லைக்குள் அதன் 24 அக்ஷ்ரங்களுக்கும் ஸ்தூலமாக 24 தூண்கள் எடுத்து காயத்ரி மண்டபமாகினர். வேதங்களையே இம்மண்டபத்தின் சுவர்களாக எழுப்பினர். அம்பிகை ஸ்ரீ சக்ரத்தில் மூலத்ரிகோணத்தில் உறைபவளாதலால் கருவறையை முக்கோணமாக அமைத்தனர். மூன்றரை வட்ட குண்டலி¬னி சர்ப்பமாக அவள் விளங்குவதால் வெளிப் பிரகாரங்களெடுத்து விஸ்தரிக்கும் போது இக்கோவிலின் மூன்றரை சுற்றுக்கள் இருக்குமாறு அமைத்தனர்.அம்மையின் விருப்பபடி அம்மைக்கு ஸ்ரீ சக்ர பதக்கம் தந்த பரமேச்வரனே பரம புண்ய பீடமான ஸ்ரீ சக்ர ஸ்தாபனம் செய்தார். கோடி காமங்களை (விருப்பங்களை) நிறைவேற்றுவதாலும், தர்ம-அர்த்த-காம-மோக்ஷ்ம் என்பதில் காமத்தின் கோடியிலுள்ள மோக்ஷ்த்துக்கு இட்டுச்செல்வதாலும் இச்சக்கரம் "காம கோடி பீடம்" என பெயர் பெற்றது.இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை பின்னரே அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.

காம கோடி பீடமான இந்த ஸ்ரீ சக்ரத்தை சுற்றி தொட்டி போல் உள்ள அமைப்பில் எட்டு தேவியர் உருவம் உள்ளது. வசினி,காமேசி,மோதினி,விமலா, அருணா, ஜயனி,ஸ்ர்வேச்வரி, கௌலினி என்பதாக ஸ்ரீ சக்ரத்தின் ஸர்வரோக ஹர சக்ரத்தில் உள்ள எட்டு தேவியரே இவர்கள். தேவியின் ஆணைப்படி இந்த வாக் தேவதைகளே லலிதா சஹஸ்ரநாமத்தை இயற்றினர்.

இச்சக்கரத்தை பற்றியுள்ள மற்றொரு கருத்து ஆதியில் பரமேச்வரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ரம் சதுர் யுகங்களில் கிருத யுகத்தில் துர்வாசராலும், த்ரேதா யுகத்தில் பரசுராமராலும், த்வாபர யுகத்தில் தௌம்ய மஹரிஷ’யாலும், கலியில் ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களாலும் பொலிவூட்டப்பட்டது .ஆதி சங்கரரின் ஆப்படி ராஜ சேன மன்னன், காஞ்சி நகரையே காமாட்சி அம்மனின் கோவிலை பிந்துவாக கொண்டு (நடுவே அமைத்து) ஸ்ரீ சக்ர ரூபத்திலே கட்டினான். சங்கரர் காலத்திலே அவைதிக மதங்களிலும், வைதிக மத ஆபாஸ்ங்களிலும் மக்கள் வீழ்ந்ததால் தேவி உக்ர கோலம் கொண்டிருந்தாள். ஆசாரியார்தாம் அவளது சினத்தை சமனம் செய்தார். உக்ர கலைகளை இழுத்து இந்த காம கோடி சக்ரத்திலே அடக்கினார்! ஸெளம்ய மூர்த்தியானாள் அம்பிகை. அச்சமயத்தில், தேவி தன் உக்ர ரூபத்தில் எட்டு திக்குகளிலும் தனக்கு சேடிகளாக கொண்டிருந்த அஷ்ட காளிகளையும் பகவத் பாதர் இங்கு அகர்ஷ’த்து, ஸ்தம்பனம் செய்து ஸ்ரீ சக்ரச் சுற்று தொட்டியில் அடைத்து விட்டார் என்பர்.

திருச்சிராப்பள்ளியிலே தாயுமானவ சுவாமி திருக்கோவிலிலே மட்டுவார் குழலி அம்மையின் சன்னதியும் ஸ்ரீசக்ர வடிவத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆதி சங்கரர், கைலாயமலையில், எம்பெருமானின், திருவாயால் அருளப்பெற்ற சௌந்தர்ய லஹரியின் பாடல்களை இக்கோவிலின் சுவர்களில் எழுதச்செய்தார்.

Akilandeswari திருவாணைக்கா அகிலாண்டேஸ்வரி
காவிரிக்கரையில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரம் என்னும் திருவாணைக்கா தலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரியின் உக்ர ரூபத்தையும், ரௌத்ரத்தையும் தணிக்க ஆதி சங்கரர், ஸ்ரீசக்ரத்தையும், சிவ சக்ரத்தையும், ஸ்வர்ணத்தில் ரத்னக் கற்கள் பதித்த இரு தடாகங்களாக்கி, அம்மையின் இரு காதுகளிலும் அணிவித்தார். இன்றும் அம்மை இத்தடாகங்களுடனே நமக்கு அருள் பாலிக்கின்றாள்.



மாங்காடு காமாஷியம்மன் அர்த்த மேரு ஸ்ரீ சக்ரம்

மாங்காட்டிலே அம்மை காமாட்சி பஞ்சாக்னியிலே தவம் செய்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் சொல் கேட்டு அவரை மணக்க காஞ்சி செல்லும் போது அந்த அக்னியை அணைக்காமலே சென்று விடுகிறார். இதன் காரணமாக இதணை சுற்றி உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்கமாட்டாமல் தவித்தார்கள். நிலங்கள் வற்றிப்போயின,கால் நடைகள் துன்புற்றன. அப்போது அந்தப்பக்கம் தேசாந்திரமாக வந்த ஆதி சங்கரர் லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளால் ஆன "அஷ்ட கந்தம்" அர்த்த மேரு" என்னும் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீசக்ர யந்திரம் ராஜ யந்திரம் ஆகும். ஆமை வடிவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற் புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீசக்ர யந்திரமும் உண்டாக்கப்பட்டுள்ளது. மூலிகைகளால் உருவானதால் ஸ்ரீசக்ரதிற்க்கு அபிஷேகம் கிடையாது, ஜவ்வாது, சந்தனம்,புனுகு சாத்தப்படுகின்றது. குங்கும அர்ச்சனை ந்டைபெறுகின்றது. மாங்காட்டிலே இந்த ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோகத்தாலான ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபுறுகின்றன. ஆனால் குங்கும அர்ச்சனை இந்த ஸ்ரீசக்ரத்துக்குத்தான்.

சங்கரன் கோயிலில் கோமதி அம்மனின் சந்நிதிக்கு முன்பு ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. மன நோய உள்ளவர்களும், நரம்பு சம்பந்தமான நோய் உள்ளவர்களும், இக்கோவிலில் உள்ள நாக தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ சக்ரத்தின் முன்பே அமர்ந்து 48 நாட்கள் தியானம் செய்ய அந்த குறை நீங்கும் என்பது ஐதீகம்.


காளிகாம்பாள் அர்த்த மேரு

சென்னை காளிகாம்பாள் சன்னிதியிலும் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த மஹா மேரு யந்திரம் உள்ளது. பச்சைக்கல்லில் வடிக்கப்பட்ட நான்கடி உயரமுள்ள மேருவை திருக்குற்றாலத்தில், மௌன சுவாமிகள் மடத்தில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி சன்னதியில் தரிசிக்கலாம். பூந்தமல்லியிலுள்ள ஆதி வைத்யநாத சுவாமி கோவிலின் உட்பிரகாரத்திலும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் பிரமராம்பிகை சன்னிதியிலும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் செட்டி குளத்திலும் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காசி ஹனுமான் கட்டத்திலுள்ள லிங்கத்தின் மீது ஸ்ரீசக்ரம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை முத்துஸ்வாமி தீஷ’தர் பூஜித்தார். நேபாள நாட்டில் குஹ்யேஷ்வரி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மேருவின் நடுவில் அஷ்ட தள தாமரையாக மூர்த்தமாக நின்று அம்பிகை அருள் புரிகின்றாள்.


கற்பக விருஷத்தினடியில் நினைத்ததை, நினைத்த மாத்திரத்திலே பெறுவது போல, சகல நற்காரியங்களும் இச்சக்ரத்தின் கீழ் அமர்ந்து வேண்ட கை கூடும். ஸ்ரீ சக்ரம் சகல மந்திர தந்திர சக்திகளின் பிறப்பிடத்தின் மூலமாதலால் செவ்வாயன்று பூஜை செய்ய மூன்று சக்திகள், மும்மூர்த்திகள், பஞ்ச பூதங்கள், நவ கிரகங்கள், 51 தத்வங்கள், முப்பத்து முக்கோடி தேவர்களை பூஜித்த பலன் கிட்டும் என்று திருமூலர் தனது திருமந்திரத்திலே கூறுகின்றார். நாமும் ஸ்ரீசக்ரத்தை பூஜை செய்து தேவியின் அருளை பெறுவோமாக.

*********

Tuesday, October 09, 2007

Navarathri # 2 ( Durga, Lakshmi, Saraswathi)

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி



கலை மகளின் பல்வேறு நாமங்கள் : நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி.





ஸரஸ்வதி என்ற'லே வீணைத'ன் நமக்கு ஞ'பகன் வரும் ஆன'ல் திருமறைக்க'டு என்னும் வேதரண்யத்தில் சரஸ்வதி தேவி வீணையில்ல'மல் க'ட்சி தருகின்ற'ள். இத்தலத்தில் ஐயன் வேதாரண்யேஸ்வரர் அம்மை "யாழைப் பழித்த மொழியாள்" அதனாலோ என்னவோ சரஸ்வதி தேவியின் கையில் வீணை இல்லை.







நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூர் சரஸ்வதி கோயில், கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூரில் அம்மனின் பாதங்களில் பகதர்கள் மலரிட்டு வணங்கி அருளைப்பெற ஏதுவாக சரஸ்வதி பூஜையன்று அம்மனின் கால்கள் அர்த்த மண்டபன் வரை நீட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.




சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கயில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.





லக்ஷ்மி தேவியின் மற்ற பெயர்கள் : திவ்ய ரூபா, அலை மகள், ஸ்ரீ, நித்ய ஸ்ரீ, பிரசன்ன வதனா, பூரண சந்திர முகி.




பூஜை நடக்கும் இடங்கள், சங்க நாதம் கேட்கும் இடம், சிவ நாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள்.
அடக்கமான பெண்கள், கணவனுக்குக் கட்டுப்பட்ட மனைவி, மனைவியைக் காப்பாற்றும் கணவன், இரக்க குணம் கொண்டவர்கள், சுறுசுறுப்பாக இருப்பவர்கள், அகங்காரம் இல்லாதவர்கள், தூய வெள்ளை ஆடை அணிபவர்கள் ஆகியோரிடம் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்திடும்.




நவ துர்க்கைகள்
: 1. வன துர்கா: பிறவிப் பெருங்காட்டை அழிக்கும் அம்மை.
2. சூலினி துர்க்கை : திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்ற துர்க்கை.
3. ஜாதவேத துர்கா: முருகன் உதித்த போது அக்னிக்கும், வாயுவுக்கும் உதவி துர்க்கை.
4.ஜ்வாலா துர்க்கை: பண்டாசுரனை வதம் புரிய அனல் பிழம்பாகி அரண் அமைத்த துர்க்கை.
5. சாந்தி துர்கா: தட்ச யாகத்தின் முடிவில் வெகுண்ட சிவ பெருமானை சாந்தப்படுத்திய அன்னை.
6. சபரி துர்கா: பார்த்தனுக்கு பாசுபதம் அளிக்க சிவனுடன் சென்ற சக்தி.
7. தீப துர்க்கை : குண்டலினி யோகிகளுக்கு ஒளியாய் நின்று ஒளிர்க்கும் தாய்.
8. ஆசுரி துர்க்கை: அமுதம் தங்கிட திருமாலுக்கு உதவிய அம்மை.
9. லவண துர்க்கை: லவணன் என்ற அசுரனை சத்ருகனன் வென்று வர இராமர் பிரார்தித்து வழிபட்ட துர்க்கை.





குடை நிழலில் துர்க்கை : தஞ்ச'வூர் திருப்புள்ள மங்கை ஸ்ரீபசுபதீஸ்வரர் கே'வில் வடக்கு பிரக'ரத்தில் உள்ள துர்க்கை, கருங்கல் குடை நிழலில் எருமை தலை மீது சங்கு, சக்கரம், வ'ள், வில், கதை, சூலம், முதலிய ஆயுதங்கள் ஏந்தி, இருபுறமும் ம'னும் சிங்கமும் இருக்கும்படி எழுந்தருளியுள்ள'ர். பள்ளி -க'ண்ட துர்க்கை:திரு-நல்வேலி கங்கை -க'ண்ட'ன் தலத்திற்க்கு வட மேற்கே பர'ஞ்சேரியில் வேறு எங்கும் இல்ல'த வகையில் பள்ளி -க'ண்ட துர்க்கை சந்நிதியைக் க'ணல'ம்.ச'ந்த துர்க்கா:உலக ந'யகியை, சக்தியை, க'ளி, துர்க்கா என்ற திருன'மங்கள'ல் அழைப்பதுண்டு. -ப'துவ'க துர்க்கா தேவி கே'வில்களில் கே'ப ரூபிய'க க'ட்சி தந்து அருளுவ'ர். கே'வா ம'நிலத்தின் தலைநகர'ன பன'ஜ'யிலிருந்து 15 கிலோ மீட்டர் து-ரத்திலுள்ள ஹ'வ்லம் தலத்திலுள்ள புர'தன துர்க்கா கே'விலில் துர்க்கா தேவி ச'ந்த ரூபிய'க பகதர்களுக்கு க'ட்சி தந்து அருளுகின்ற'ள்.


துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூன்று அம்சங்களும் சேர்ந்தவள் த'ன் லலிதா திரிபுர சுந்தரி, ஸ்ரீவித்யா தேவி என்றும் வழிபடுகின்றே'ம். அன்னையின் புகழைப்ப'அடுவதுத'ன் தேவி ப'கவதம்.





கேரளாவிலுள்ள சோட்டாணிக்கரை பகவதி அம்மன் முப்பெரும் தேவியர்களிம் அம்சம் என்பது ஐதீகம். அம்மனுக்கு காலையில் சரஸ்வதி அம்சமாக வெள்ளை வர்ண அலங்காரமும், உச்சி வேளை லக்ஷ்மி அம்சமாக சிவப்பு வண்ண அலங்காரமும், மாலை துர்க்கை அம்சமாக நீல நிற அலங்காரமும் செய்யப்படுகின்றது. அதாவது துர்கா. லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று அம்மன்களும் பகவதி வடிவில் அருள் பாலிப்பதாக ஐதீகம்.


விஜய தசமி நன்ன'ள் -வற்றி, வீரம், -சல்வம், கல்வி அனைத்தையும் தரும் சுப ந'ள். அந்ந'ளில் வன்னி மரத்தை பூஜ'த்து வழிபட்ட'ல் ப'வ நிவர்த்தி சத்ரு ந'சம் ஏற்படும் என்பது ஐதீகம்.

விஜய தசமி அன்று ஹ'ம'ச்சல பிரதேசத்திலுள்ள பகதர்கள் குலு பள்ளத்த'க்கிற்கு கிர'மத்திலுள்ள தேவதைகளின் திரிஉருவங்களைக் -க'ண்டு வந்து தேவதைகளுக்கு விழா எடுப்பர். குலு பள்ளத்த'க்கை கடவுளர்களின் இருப்பிடம் என்றும் அழைப்பர்.

நவர'த்திரி ஒன்பது ந'ளும் ஒரு -பரிய திடலில் பலர் சேர்ந்து இர'ம'யண ந'டகம் நடத்துவர், அதில் வ'ண வேடிக்கை, கடைகள், மிட்ட'ய்க்கடை, வளையல்க் கடை என்று -பரிய சந்தையே வரும். இதற்கு மேளா என்று -பயர். விஜய தசமியன்று இர'வணன், கும்பகர்ணன், மேகன'தன்(இந்திரஜ'த்) ஆகியே'ர்களின் -க'டும்ப'வி -சய்து எரிப்பர்.




வங்க'ளத்திலும் மற்றும் அஸ'ம் முதலிய கிழக்கு ம'நிலங்களிலும் சஷ்டி ந'ள் -த'டங்கி தசமி வரை துர்க்கா பூஜை சிறப்ப'க நடை-பறுகின்றது. வீதி வீதி-யங்கும் பந்தல்கள் அமைத்து அதில் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, வின'யகர், முருகர் மற்றும் வின'ய'கரின் மனைவி அபரஜ'தா ஆகிய அறுவரையும் சிறப்ப'க பூஜ'க்கின்றனர். தினமும் க'லையிலும் ம'லையிலும் பூஜை நடை-பறுகின்றது தேவி மக'த்மியம் ஓதப்படுகின்றது. திருக்கைல'யத்திலிருந்து பூலே'கத்தில் தன் த'ய் வீட்டிற்க்கு தன் மகள்கள'ன சரஸ்வதி, லஷ்மி, மகன்கள'ன வின'யகர் , க'ர்த்திகேயன் மற்றும் அபர'ஜ'த'வுடன் சஷ்டியன்று வந்து பின் தசமியன்று திரும்பிச்-சல்வத'க ஐதீகம். விஜய தசமியன்று நம்முடைய வீட்டுக்கு வந்த மகளை ந'ம் எவ்வ'று žர் -சய்து அனுப்புவே'மோ அது பே'ல த'ய்ம'ர்கள் சிந்து-ரமிட்டு, இனிப்பு ஊட்டி -வற்றிலைய'ல் திருஷ்டி கழித்து அம்மையை தன் கணவன் இல்லம'ம் திருக்கைல'யம் அனுப்பும் ப'ங்கை விவரிக்க வ'ர்த்தைகளே இல்லை. வங்க'ளத்தில் லக்ஷ்மிக்கு வ'கனம் ஆந்தை. துர்கா பூஜையின் பே'து வங்க'ளிகள் அனைவரும் புத்த'டை உடுத்தி, இனிப்புக்கள் பரிம'றி மகிழ்வர். விஜய தசமி ம'லை அன்னை தன் பரிவ'ரங்களுடன் தனது புகுந்த வீட்டிற்கு -சல்வது பே'ல் பந்தலில் இருந்து நீர் நிலைக்கு எடுத்து -சன்று கரைக்கின்றனர், முரசு -க'ட்ட ச'ம்பிர'ணி பூஜை நடத்தி நடனம'டியபடியே விக்ரகங்ஹளை ஆற்றில் விடுகின்றனர். அன்னையை ஆற்றில் கரைத்த பின் அந்த நீரை எடுத்து வந்து ச'ந்தி ஜல் என்று அனைவரின் மீதும் -தளிக்கின்றனர்.

விஷ்ணு ஆலயங்களில் விஜய தசமியன்று வன்னி மரத்தில் அம்பு எய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. திருவரங்கத்தில் நம் பெருமாள் குதிரை வாகனத்தில் காட்டழகிய சிங்கர் கோவிலுக்கு எழுந்தருளி அருகில் உள்ள வன்னி மரத்தின் மேல்னம்பு எய்கிறார். பின் அருகே உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பின் நம் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளுவதுடன் நவராத்திரி கொண்டாட்டம் நிறைவு பெறுகின்றது. சென்னை மேற்கு மாம்பலம் சத்ய நாராயணர் திருக்கோவிலில் தாயாருடன் பெருமாளும் தசாவதார கோலத்தில் நவராத்திரி நாட்களில் சேவை (கொலு) சாதிக்கின்றார். மயிலை வேதாந்த தேசிகர் சன்னதியில் ஸ்ரீநிவாச பெருமாள் நவராத்திரி பிரம்மோற்சவம் கண்டருளுகின்றார். திருமலை திருப்பதியில் புரட்டாசி திருவேணத்தை ஒட்டி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இந்த வருடம் திருவோணம் முதலில் வந்ததால் இரண்டாவது தடவையாக நவராத்தியின் போதும் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.



(இந்த செய்திகள் அனைத்தும் பல்வேறு பத்திரிக்கைகளில் படித்தவை.)









HOW NAVARATRI IS CELEBRATED IN DIFFERENT PARTS OF THE COUNTRY


NAVARATHRI is one of those festivals that is celebrated throughout this country in different forms. It symbolises the "Victory of Good over evil" . Mostly it hails the victory of Ambaa as Mahisasura Mardhini slaying of demon Mahisan(Bufallao). In northern region it is celebrated as the victory of Rama over Ravana. So that Ramlila is held in the Northern Region. In the south it is Navarathri in which Kolu's are held in houses ans Ambaa sits in Kolu in different alngarams in temples. First three days of Navarathri she is worshipped as Maha Durga ( Sakthi- Goddess of valour) next three days she is worshipped as Maha Lakshmi ( Goddess of wealth) and the last three days she is worshipped as Maha Saraswathi ( Goddess of knowledge). 10th day is Vijaya Dasami. All auspicious beginnings are done on this day. In Kerala Vidyarambam is done on this day. In Karnataka in mysore great procession is taken on this day with mother Chamundeswari leading the procession.

In the east it is the Durga Pooja , Mother Parvati leaves Kailash and comes to her earthly home during this Navarathri days she is welcomed to her home and installed in pandal and worshipped for three days starting from Shasti and bid farewell on Dasami day praying Her to come back again next year.

In the west it is Karba time, mother is worshipped with Karba dance throughout the nine nights. The dances are centered around a structure erected for the purpose of holding diyas (wicked -lamps) in niches. garbi is a symbol of fertility and signifies the worship of Mother Goddess. Dandiya Raas signifying Raas leela of Krishna is also done .

In the North in traditional it is Navarathri and Ram lila.

Sunday, October 07, 2007

Navarathri # 1 ( Sakthi peetams)


ஓம் சக்தி
SAKTHI PEETAMS (SEATS OF MOTHER GODDESS)


VAISHNO DEVI MAA 
 வைஷ்ணவோ தேவி


Worship of Mother Goddess was prevalent even during the Indus valley civilization period. There are abundance of temples in the Indian subcontinent which are dedicated to SAKTHI (energy or power) that's how Mother Goddess is called by Her followers. Out of these abodes of Sakthi 51 are the most sacred ones and are revered very much they are called SAKTHI PEETAMS (Seats of Sakthi).


The legend behind this belief is that in the earlier days of Parvathi the consort of Lord Shiva was known as Dakshayani (daughter of Daksha), Sati Devi was Her other name then. She married Lord Shiva against the wishes of Her father. So to humiliate Lord Shiva, Daksha started a yagna for which he invited all the Devas (celestials) and left Shiva and Sati Devi uninvited. He also did not offer the avir pakam ( the sacrificial offering to each God through the yagna) to Shiva. Dakshayani pleaded with Shiva to allow Her to attend the ceremony as She wanted to tell Her father about his wrong and arrogant act. The reluctant Lord allowed Her to attend the ceremony but warned Her that She will be humiliated by Her father.

Sati Devi reached Her house and chided Her father for His arrogant act of not inviting Lord Shiva for the yagna, but the arrogant Daksha did not realise his wrong but humiliated Dakshayani by telling ill about the Lord and also asked her to leave the place. Enraged by Her fathers misdemeanor, She decided to teach him a lesson. So She jumped into the yagna fire to destroy his yagna. Meanwhile Veera Bhadra a fierce form of Lord Shiva reached the yagna site and destroyed everybody, in which Daksha also was killed and his head was replaced with a goat's head. Thus Daksha was taught a lesson for his misdeed. The devas who took part in this wrong yagna were also punished.



KEDARNATH SAKTHI PEETAM 
 திருக்கேதாரம்



The teaching we get from this episode of cutting of the head of Daksha is :
1. Lord Shiva is the Head of all yagnas.
2. Arrogance will lead us only to our downfall.
3. However mighty you (including Devas) may be you will be punished for your misdemeanor of participating in the illegitimate yagna .


Unable to bear the loss of His consort Lord Shiva took Her body in His hand and started the Rudra Thandavam (dance of destruction). The dance of bliss of Lord Shiva is described by the saint poetess Karaikkal Ammaiyar, who willed to be seated at the lotus feet of the Lord always , like this. My Lord when you do your cosmic dance in bliss, just if you lift your lotus feet the peaks of mountain will interchange places, when you gently place your feet the nether land will temble, when you lift your hands the sky will turn topsy- turvy . But you do your dance in the most graceful way so that no harm is brought to anybody in this universe and by your cosmic dance you make the whole universe dance in the most orderly fashion.




Even while dancing gracefully if this can happen think about when he dances fiercely. The whole universe trembled and there was chaos every where. Then Devas pleaded with Lord Maha Vishnu to do something to pacify Lord Shiva. Realising that the only way to pacify the Lord is to remove the body of Sati from the hands of the Lord Maha Vishnu sent His Chakra(The Holy Disc) which cut the body of our Mother into many pieces and Vishnu made the different parts of the body to fall at different palces of the Indian sub-continent. The places where the different parts of our Mother fell were revered as Sakthi Peetams and temples were built in these places and are considered most sacred. When you visit these shrines you can feel the the divine waves you receive. It is believed that hese 51 sakthi peetams are the 51 letters of Devas. To shower Her blessings to all of us our Mother installed Herself in these abodes.




KAMAKYA MAA 
   காமாக்யாஅன்னை



The most sacred 51 abodes of Mother known as Sakthi Peetams are :
1.Kamarup(Assam) here mother is known as Kamakya,
2.Kasi (Varanasi) here mother present Herself as Visalakshi and Anna poorani,
3.Gruheswari (Nepal)
4. Raudra Parvat ,
5.Vaishno Devi (Kashmir) here mother manifests herself in the three forms of Maha Kali, Maha Lakshmi, and Maha Saraswathi.
6.Kaanya kupjam (Uttar Pradesh) ,
7.Poornahiri (The Himalayas),
8.Ambaji (Rajasthan),
9.Aamrathakeshwaram ,
10. Kanchi - Ekambaram,
11. Kanchi- mukkudal,
12. Kanchi -Kama kodi,( There are three peetams in this sacred city).
13.Kailash (Himalayas)
14.Birugu Peetam .
15.Kedarnath(Himalayas).
16.Santharapuram.
17.Shri peetam.
18. OMkaar (Madhya Pradesh).
19.Jullandar(Punjab)
20.Malwa (Saurashtra)
21. Kulandakam
22.kottakam(Deva Kottam)
23.Kokarnam(Karnataka).
24.Marutheshwaram.
25.Attahaasam .
26.Viraja.
27.Rajagruham.
28.Mahapatham
29. Kollapuram (Kollur - Mookambikai)
30.yelapuram.
31.Kaleshwar
32. Jayanthi
33.Ujjain (Madhya Pradesh - Maha Kali )
34.yogini.
35.Ksharika.
36.Hasthinapur.
37.Uttisam.
38.Prayag (Allahabad - Lalitha)
39.Sashtikam
40.Mayapuri (Haridhwar -Manasa Devi)
41. Malayam (Tibet).
42.Shri Sailam (Bramarambal)
43. Meru (Himalayas).
44.Giri peetam (Junagad - Amba)
45.Mahendram.
46. Vaamanam.
47.Hiranyapuram.
48.Maha Lakshmipuram (Kohlapur- Mahalakshmi)
49.Athristhanam.
50. Saaya peetam and
51.Sathradam.


( Note. There is no unanimity about the number of Sakthi Peetams and also about their exact location and most of the places given here have different modern names).
* * * * * * *
சக்தி பீடங்கள்



KAMAKYA SAKTHI PEETAM காமாக்யா திருக்கோவில்

நமது பாரத தேசமெங்கும் பல வடிவங்களில் அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. வடநாட்டிலே மாதா என்றும், வைஷ்ணவோ தேவி என்றும் வணங்கப்படுகின்றாள் அன்னை. கிழக்குப் பகுதியில் காளியாக தன் பக்தர்களால் போற்றப்படுகின்றாள். மேற்கு பகுதியிலே அம்பா மாதாவாகவும், மஹா லஷ்மியாகவும் அருள் பாலிக்கின்றாள். நம் தென்னாட்டிலே எம் அம்மைக்குத்தான் எத்தனை ரூபங்கள் எண்ணிய ரூபத்திலே எழுந்தருளி நம்மை எல்லாம் காத்து நிற்கின்றாள். தாய் வழிபாடு சிந்து சமவெளி காலத்திலேயே இருந்தத்ற்கான சான்றுகள் உள்ளன. இந்து மதத்தின் அறு சமயங்களுள் தாயை வழிபடும் சாக்தமும் ஒன்று. எவ்வாறு தன் பக்தர்களை அரணாக இருந்து காத்திட எம் தாய் கோவில் கொண்ட மிகுந்த புண்ணிய தலங்கள் தான் சக்தி பீடங்கள். அவை மொத்தம் 51, எத்தனையோ கோவில்களிலே எம் அம்மை குடி கொண்டிருந்தாலும் இந்த கோவில்களின் சிறப்பு என்ன என்பதை இக் கட்டுரையில் காண்போமா?


கல்கத்தா காளி (Calcutta Kali)
இந்த சக்தி பீடங்களின் தோற்றம் எம் ஐயன் செய்தருளிய அஷ்ட வீரச் செயல்களுல் " தட்சன் சிரம் கொய்த" வீர செயலுடன் தொடர்புடையது. அப்போது அம்மைக்கு பெயர் சதி தேவி, அவள் பிரம்ம தேவரின் மகனான தட்ச பிரஜாபதிக்கு மூத்த மகளாகப் பிறந்ததால் தாட்சாயிணி என்றும் அழைக்கப்பட்டாள். அம்மை கல்யாணப் பருவத்தில் தன் தந்தையின் விருப்பத்திற்க்கு மாறாக சிவபெருமானையே மணக்க வேண்டும் என்று கடுமையான தவம் செய்தாள். அம்மையின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானும் முதியவர் வேடத்தில் வந்து அம்மையை சோதித்தார். சிவன் பித்தன், பேய் உலவும் காட்டில் வசிப்பவன், இறந்தவர்களின் சாம்பலை உடலெங்கும் பூசித்திரிபவன், பாம்புகளை அணிந்தவன் எனவே அவன் அதி ரூப சௌந்தர்ய வல்லியான உனக்கு பொருத்தமானவன் இல்லை என்று பலவாறு கூறி அம்மையின் உறுதியை ம'ற்ற ஐயன் முயற்சி செய்தார். ஆனால் அம்மை சிவனையே மணப்பேன் என்பதில் உறுதியாக இருந்ததால், தன் சுய ரூபத்தைக் காட்டி அம்மையை எவருக்கும் தெரியாமல் கூட்டிச் சென்று எம் ஐயன் மணந்தருளினார் இவ்வாறு சதி தேவி சிவனை மணந்தது தட்சனுக்கு பிடிக்கவில்லை.

அந்த கோபத்தினால் தட்சன் சிவபெருமானை கடவுளாக கருத விரும்பவில்லை. கோபத்தில் அவன் ஒரு யாகம் நடத்த திட்டமிட்டான். அதற்காக சிவ பெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு அனுப்பவில்லை. அழைப்பு அனுப்பாதது மட்டும் இல்லாமல் யாகத்தின் போது சிவனுக்கு தர வேண்டிய அவிர் பாகத்தையும் கொடுக்க மறுத்தான் அவன். இவ்வாறு சிவ பெருமானை அவமானம் செய்ய வேண்டும் என்று தட்சன் தொடங்கிய யாகத்தில் மற்ற தேவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Sri Sailam Bramarambal ஸ்ரீ சைலம் பிரம்மராம்பாள்

சதி தேவி ஐயனின் அனுமதி பெற்று தன் தந்தையின் மனதை மாற்றுவதற்காக யாகம் நடத்தும் இடத்திற்கு வருகின்றார். தட்சனிடம் அவனது அறியாமை எடுத்துரைத்து, சிவ பெருமனை யாகத்திற்க்கு அழைக்குமாறும் அவருக்கு தர வேண்டிய முறையான அவிர் பாகத்தை தருமாறும் கூறுகிம்றாள். ஆனால் ஆணவம் கொண்ட தட்சன் அவளது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கோபம் கொண்ட அம்மை அவனது யாகம் அழிய தானே அந்த யாகத் தீயில் குதித்தாள். அதே சமயம் சிவபெருமான் அனுப்பிய வீரபத்ரரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் யாகத்தை அழித்து, முறையில்லாத யாகத்தில் கலந்து கொண்ட வானவர்கள் அனைவரையும் தண்டித்தார். மேலும் தக்கனுடைய சிரத்தை கொய்து அதில் ஆட்டின் தலையை பொருத்தினர் .இதை மாணிக்க வாசகர் தனது பாடலிலே எவ்வாறு கூறுகின்றார் பாருங்கள்

சந்திரனை தேய்த்தருளி தக்கன் தன் வேள்வியினில்

இந்திரன் தோள் நெரித்திட் எச்சன் தலையரிந்து

அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல் தகர்த்து

சிந்தித் திசை திசையே தேவர்களை ஓட்டுகந்த .......
முறையில்லாத தக்கன் செய்த யாகத்திலே கலந்து கொண்ட சந்திரனை மெலிவித்து, இந்திரனது புயங்களை தாக்கி, யாகத் தலைவனின் தலையை கொய்தொழிந்து, வானிலே செல்லும் விளக்கமுடைய பகலவனது பற்களை உடைத்து விண்ணவர்களை சிதறியோடபடி செய்தார் என்றபடி நாம் அறம் பிழைத்ததால் வருவது துன்பமே, எனவே நாமும் அறவழி ஒழுக வேண்டும் என்பதை கூறுகிறார்.



இந்த தக்க சிரம் நமக்கு உணர்த்தும் நீதிகள் மூன்று முதலாவது குண்டலினி யோகமான அக வேள்வியிலும், புற வேள்வியாகிய யாகத்திலும் சிவபெருமானே வேள்வித்தலைவன் என்பது. " கண் சுடரோன் உலகேழும் கடந்த அந்தண் சுடரோன் ஓமத்தலைவன் " என்பது தான் விதி. இரண்டாவது "ஆணவம் அழிவையே அளிக்கும்". ஆணவம் கொண்ட தக்கன் தன் ஆணவத்திற்க்காக தனது உயிரையே இழந்தான். மூன்றாவது" வானவரே ஆயினும் அறம் பிழைத்தால் தண்டனை அடைவர்". அரி, பிரமன்,சூரியன், சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் ஆகியோர் தக்கனுடன் சேர்ந்து தருக்கிய நிலையில் நிலை தடுமாறி போது மூக்கு, கை, தோள் ஆகியவற்றை இழந்தனர். ஏனைய மற்ற தேவர்கள் அனைவரும் சூர பத்மனிடம் அடிமைப்பட்டு துன்பம் அனுபவித்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் சரணாகதி அடைய ,சிவ சக்தி ஐக்கியம் மீண்டும் ஏற்பட்டது, உலகத்தோர்க்கு நன்மை செய்ய ஒரு தலைமகனாம் குமரன் தோன்றினான் அவன் சூர சம்ஹாரம் செய்ய தேவர்கள் அனைவரும் துன்பத்திலிருந்து விடுபட்டனர்.


கொல்லூர் மூகாம்பிகை Kollur Moogambikai
சதி தேவி யாக குண்டத்தில் குதித்து யாகத்தை அழித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டதை பார்த்த சிவபெருமான் தன் உடலின் பாதியான கௌரியின் உடலை எடுத்துக் கொண்டு "ருத்ர தாண்டவம்" ஆடத்தொடங்கினார். ஆறவா உன் ஆடும் பதத்தின் கீழே அனுதினமும் அமர்ந்திருக்க வேண்டும் என்று வேண்டி ஆடும் ஐயனின் திருவடிக்கீழேயே அமர்ந்த காரைக்காலம்மையர், எம் ஐயனின் ஆனந்தக் கூத்து இவ்வாறு இருக்கும் என்றார் " பிரபஞ்சமாகிய அரங்கத்தில் நீ ஆடுகையில் உன் அடி பெயர்ந்தால் பாதாளம் பேரும், அடிகளை மாற்றும் போது மலை முகடுகள் பேரும், கை அபிநயம் மாற்றுகையில் வான் திசைகள் பேரும், ஆனால் நீ பிரபஞ்சத்திற்க்கு எந்தவித சேதமுமின்றி நீ அசையாது அனைத்தையும் அசைய வைத்து ஆடும் சூட்சும நடனம் ஆடுகின்றன" என்பார். இவ்வாறு அனந்த நடனம் ஆடும் போதே இவ்வாறு நடைபெருமென்ற'ல் கோபத்துடன் எம் ஐயன் ஆடும் போது அண்ட சராசரங்களூம் நடுங்கின. வேதனை பொறுக்க முடியாத தேவர்கள் அனைவரும் மஹா விஷ்ணுவை வேண்டினர், சிவபெருமானை சாந்தப்படுத்த ஒரே வழி சதி தேவியின் உடலை சிவ பெருமானிடமிருந்து பிரிப்பதுதான் என்பதை உணர்ந்த விஷ்ணு "வாழி நீ திருவாழியே' என்று ஆழ்வார்களால் போற்றப்பட்ட ஸ”தர்சன சக்கரம் நாம் வாழ்த்த முடியாத கொடூரத்தை செய்தது. நம் அன்னையின் புனித தேகத்தை சிதைத்து பாரத கண்டத்தின் நான்கு திசைகலிலும் சிதறி விழுமாறு செய்தது திருமால் ஏவிய சக்கரம். பிற்பாடு சக்தி பீடங்களான சகல தல்ங்களுக்கும் உறைவிடமான அவளது சரீரம் தேவ பாஷையில் உள்ள 51 அக்ஷ்ரங்களும் உருவாக்கிய வடிவாகும். எனவே அவளது உடல் 51 இடங்களில் விழுந்து 51 சக்தி பீடங்களாகின.



இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த் சக்தி பீடங்கள் எவை என்று பார்ப்போமா?

1. காம ரூபம் (அஸ்ஸாம்) அம்மையின் மர்மஸ்தானம் விழுந்த இடம் தாந்த்ரீக வழிபாட்டிற்க்கு சிறந்த தலம். காமாக்ஷ’

2. காசி மணி கர்ணிகா பீடம். இது யோக பீடம் ஆகும். அம்மை இங்கே கமண்டலம் மற்றும் அஷமாலை தாங்கிய விஷாலாஷ’யாகவும், அன்னபூரணியாகவும் அருள் பாலிக்கின்றாள்.


3.நேபாளம் (க்ருஹாகேஷ்வரி),

4. ரௌத்ர பர்வதம்.

5.காஷ்மீரம் வைஷ்ணவ தேவி அம்மையின் இடக்கரம் விழுந்த இடம். இங்கு மஹா காளி, மஹா லஷ்மி, மஹா சரஸ்வதி என்னும் முப்பெரும் தேவிகளாக அம்மை அருள் பாலிக்கின்றாள்.

6. கான்யா குப்ஜம் (உத்திரப் பிரதேசம்).


Kasi Anna Poorani காசி அன்ன பூரணி



7.பூர்ணகிரி (இமாலயம்)

8.அற்புஜாஜாம்( அம்பாஜி ராஜஸ்தான்)

9.ஆம்ராதகேஸ்வரம்.



Kanchi Kamkshi காஞ்சி காமாட்சியம்மன்






10 ஏகாம்பரம் (காஞ்சி) அம்மையின் நாபிக் கமலம் விழுந்த இடம் காமாக்ஷ’

11. காஞ்சிபுரம் - முக்கூடல்.

12. காம கோடி (காஞ்சி) அம்மையின் மேகலையான காஞ்சி விழுந்த இடம். இத்தலத்தில் மட்டுமே மூன்று சக்தி பீடங்கள் உள்ளன..


HOLY KAILASH & MANASAROVAR திருக்கயிலாயம் மானசரோவர்



13. கைலாசம்(இமாலயம்).

14. ப்ருகு பீடம்

15. கேதாரம் (இமாலயம்)


16. சந்தரபுரம்

17. ஸ்ரீ பீடம்

18. ஓங்காரம்(மத்தியப் பிரதேசம்)

19. ஜாலந்தரம் ( பஞ்சாப்)

20. மாளவம்( சௌராஷ்டிரா)

21. குலாந்தகம்

22.கொட்டகம்(தேவகோட்டம்)

23. கோகர்ணம் (கர்நாடகா)

24. மாருதேஷ்வரம்

25. அட்டஹாசம்.

26. விரஜ

27. ராஜக்ருஹம்

28. மஹாபதம்

29. கொல்லகிரி (கொல்லாபுரம்) மூகாம்பிகை

30. ஏலாபுரம்

31. காலேச்வரம்

32. ஜயந்தி.

33. உஜ்ஜயினி (மத்தியப் பிரதேசம்) காளிகா

34.யோகினி

35. க்ஷ"ரிகா

36.ஹஸ்தினாபுரம்

37. உட்டீசம்

38. ப்ரயாகை (அலகாபாத்) லலிதா

39.ஷஷ்டீகம்

40. மாயாபுரம் (ஹரித்வார்,ஸ்ரீ மனசா தேவி சதியின் தலை விழுந்த இடம்)

41.மலயம். (திபெத்)

42.ஸ்ரீ சைலம் (ஆந்திரப் பிரதேசம்) பிரமராம்பாள்

43. மேரு (இமாலயம்)

44. கிரிபீடம் (ஜுனகாத்) அம்பா



Amba அம்பா



45. மஹேந்திரம்

46. வாமனம்

47. ஹ’ரண்யபுரம்

48. மஹாலஷ்மிபுரம் (கோலாப்பூர்) மஹாலஷ்மி

49.அத்ரிஸ்தானம்.

50 சாயா பீடம்

51. சத்ரடம்.

இந்த பரந்த பாரத தேசமெங்கும் அரணாக இருந்து நம்மை காத்திட எம் தாய் கோவில் கொண்ட மிகுந்த புண்ணிய தலங்களான இந்த சக்தி பீடங்களை கண்டு தரிசித்து நன்மை அடைவோமாக.


ஓம் சக்தி


* * * * * * *


Let us see about some of the temples dedicated yo Mother Goddess ans other related stories this year.
  • Other Articles
  • Unicode enable