Wednesday, October 21, 2020

கோலாகல நவராத்திரி - 4

 ஸ்ரீசண்டி மஹிமை


யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்கள்நோய் நொடிகள் எனஎல்லா துன்பங்களையும் போக்கிஅன்னையின் அருளால்நினைத்த வரங்களைப் பெற்றுஇன்பமாய் வாழலாம்சுரதன் எனும் அரசன்பூவுலகம் முழுவதையும்நீதி வழுவாமல் அரசாண்டு வந்தான்அவனது வளர்ச்சியைக் கண்டுகோலா வித்வம்சினர்கள் என்ற எதிரிகள்,அவனை சூழ்ச்சியால் வென்றனர்ராஜ்ஜியம் இழந்த அவ்வரசனின் அரண்மனை மற்றும் இதர உடைமைகளையும்அவனது சுற்றத்தாரும்அமைச்சர்களும் எடுத்துக் கொண்டுஅவனை ஏமாற்றி விடுகின்றனர்.

இதனால் மனமுடைந்த சுரதன்காட்டுக்குச் செல்கிறான்தனிமையான இடத்தில் இருந்துநடந்ததை எண்ணி எண்ணிமனம் சோர்ந்து கொண்டிருந்தான்.அப்போதுஅங்கு ஒருவர் தன்னைப் போலவே சோர்வுடன் இருப்பதைக் கண்டு, 'யார் நீங்கள்?' எனவினவுகிறான்அவரும்தாம் மிகப் பெரிய வணிகர் குலத்தில் பிறந்த செல்வந்தர் என்றும்மனைவிமக்களே தம்மை ஏமாற்றிசெல்வத்தைப் பிடுங்கிக் கொண்டதாகவும்அதனால்வாழ்க்கையை வெறுத்துகாட்டிற்கு வந்ததாகவும் கூறினார்.

இரு வேறுபட்ட கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட இருவரும்தங்களின் விடிவுகாலம் மற்றும் மோட்சம் பற்றி அறியஅங்கு தவம் செய்து கொண்டிருந்தசுமேதஸ் என்ற முனிவரை அணுகிதங்களது கதைகளை கூறிதுன்பம் நீங்க வழிகாட்டியருளுமாறு வினவினர்முனிவரும்அவர்கள் மீது கருணை கொண்டு, 'அன்னையைச் சரணடைந்தால்உங்கள் துன்பங்கள் அகலும் என்று கூறினார்அரசாட்சியிலும்வியாபாரத்திலும் காலம் செலுத்தி வந்த அவ்விருவரும்அம்பிகையை அறிந்திருக்கவில்லைஎனவே அவர்கள்முனிவரிடம், 'அம்பிகை என்றால் யார்அவளின் மகிமைகள் என்ன?' எனவினவினர்.முனிவரும்அன்னையின் அற்புத வரலாறுகளை கூறியதுடன்மதுகைடபன்மகிஷாசுரன்சும்பன்நிசும்பன் போன்ற அரக்கர்களை அழிப்பதற்காககாளிதுர்கை போன்ற அவதாரங்கள் எடுத்துஅசுரர்களை அழித்துமூவுலகையும் காப்பாற்றிய புராணங்களை அருளினார்.

இவற்றையெல்லாம் கேட்ட அரசனும்வணிகரும், 'அந்த அம்பிகையை வழிபட்டுநாங்களும் அருள் பெற வழி கூற வேண்டும்எனவேண்டினர்.'நவராத்திரி தினங்களில்அன்னையின் வரலாறுகளைப் படித்தும்கேட்டும்கொலு வழிபாடு செய்தும்அம்பிகைக்குப் பிரியமானஸ்ரீ சண்டி ஹோமம் செய்து வழிபட்டால்நீங்கள் இழந்த வாழ்க்கையை மீண்டும் பெறலாம் எனக்கூறினார்.

இருவரும் அவ்வாறே செய்யயாக குண்டத்திலிருந்து ஸ்ரீ சங்கரிதேவி தோன்றி, 'என்ன வரம் வேண்டும்?' எனக் கேட்கஇழந்த ராஜ்ஜியத்தை பெற மீண்டும் வேண்டினான் அரசன். 'உன் பக்தியிலும்வழிபாட்டிலும் மிக்க மகிழ்ச்சிஅடைந்துள்ளேன்இதற்கு வரமாகஇப்பிறவியில் பூமண்டல சக்கரவர்த்தியாக ஆண்டும்அடுத்த பிறவியில்சூரியனுக்கு மகனாகப் பிறந்து, 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒருமன்வந்திரம் முழுதும்உன் பெயரால் உலகை ஆள்வாயாகஎன்று வரமருளினாள்தற்போது நடப்பதுஉலக சிருஷ்டியின், 14 வரிசை மனுக்களில்ஏழாவது மனுவாகச் சொல்லப்படும் வைவஸ்வத மன்வந்திரம்அடுத்து வரப்போகும்சாவர்ணிக மன்வந்திரமாகசுரதன் விளங்கப் போகிறான்வணிகர், 'தமக்கு வாழ்க்கை இனி வேண்டாம்உன்னையே வணங்கிதவமிருந்துகண்டு தரிசிக்கும் வரம் வேண்டும்என்றார். 'அப்படியே ஆகட்டும்...' எனஅன்னை சங்கரி தேவி வரமளித்த வரலாறுமார்க்கண்டேய புராணம் எனும் நுாலில் கூறிய வண்ணம்நாமும் சிந்தித்தால்சாதிக்க முடியாதது எதுவும் இல்லை எனும் மனோபலத்துடன் வெற்றியுடன் வாழலாம்.

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்.



நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னையை நான்கு வயது குழந்தையாக பாவித்து கல்யாணி என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம்அன்னையை இவ்வாறு வழிபடுவதால் பகை ஒழியும்இன்றைய ஸ்லோகம்

கல்யாண காரிணீநத்யம் பக்தானாம் பூஜிதாம் பூஜயாமி | சதாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வகாதமாம் || 

(பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு அவர்களுக்கு எந்தச் சக்தி மங்களத்தைச் செய்கின்றதோஅந்தக் கல்யாணியாகிய சக்தியை வணங்குகிறேன்.)

                              

சந்த்ரகாந்தா துர்கா

நவராத்திரியின் மூன்றாம் நாள் அன்னை நவதுர்கைகளில் , முக்கண்களுடன் பிறைச்சந்திரனை தலையில் சூடியவளாகபுலி வாகனத்தில் பவனி வருபவளாக , சிவபெருமானை தவம் செய்து கைபிடித்த பின் அவரது ஆபரணமான சந்திரனை சிரசில் சூடிய சிவபத்னியாக சந்த்ரகாந்தா துர்காவாக வணங்கப்படுகின்றாள்அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிஅன்னையில் சிரசில் சூடிய இந்த அர்த்த சந்திரன் அவள் முடியில் மணி போல விளங்குவதால் அன்னைக்கு இந்த திருநாமம்மஹா திரிபுரசுந்தரியாக பழுப்பு வண்ணத்தவளாக விளங்குகின்றாள் இந்த துர்காசந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள்இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது.

பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர் யுதா |

ப்ரஸாதம் தநுதே மஹ்யம் சந்த்ர கண்டேதி விஸ்ருதா ||

என்பது சந்த்ரகாந்தா துர்காவின் ஸ்லோகம் ஆகும்.



 ஆக்ரோஷமான புலி வாகனத்தில் பவனி வரும் சந்த்ரகாந்தா துர்கா அடியேனை காக்கட்டும். )

                                                   

மூன்றாம் நாள்

த்ரிதியையன்று  -  வாராஹி

மலர்: சம்பங்கி

நைவேத்தியம் : சர்க்கரை   பொங்கல்

நிறம்: சாம்பல்

கோலம் : பூ கோலம்.

ராகம் : காம்போதி ராகம்

ஸ்லோகம் :

ஓம்  மகிஷத்வஜாய  வித்மஹே  தண்ட ஹஸ்தாய தீமஹி |

தன்னோ வாராஹி ப்ரசோதயாத் ||

அம்மன் அருள் பெருகும் . . . 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal