Tuesday, October 12, 2010

நவராத்திரி அலங்காரங்கள் - 9

நவராத்திரி ஒன்பதாம் நாள்

அன்னைக்கு மிகவும் உகந்த மஹா நவமி நாளும் நாம் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை கொண்டாடும் நாளும் நவராத்திரியின் நிறை நாளும் ஆன இந்த ஒன்பதாம் நாள் அன்னையை பத்து வயது குழந்தையாக பாவித்து சுபத்ரா என்னும் கன்யாவாக வழிபடுகின்றோம். அன்னையை இவ்வாறு வழிபடுவதால் சர்வ மங்களம் உண்டாகும் . இன்றைய ஸ்லோகம்


ஸுபத்ரபணிச பக்தானாம் குருதே பூஜிதா ஸதா அபத்ர

நாசினீம் தேவீம் ஸுபத்ராம் பூஜயாம்யஹம் ||

(தன்னை பூஜை செய்பவர்களுக்கு மங்களைச் செய்து அமங்கலங்களை எந்த சக்தி நீக்குகிறதோ அந்த சுபத்திரையை வணங்குகிறேன்.)


ஸித்திதாத்ரி துர்க்கா

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்று நவதுர்க்கைகளில் சித்திதார்த்தியாக வழிபடுகின்றோம். தியானம், யோகம், ஞானம் அனைத்துக்கும் உரியவளான சித்திதாத்ரி தேவி நவதுர்க்கையின் ஒன்பதாவது வடிவமாகக் காட்சி கொடுக்கிறாள். பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், தேவர்கள் போற்றிப் பூஜிக்கும் சித்திதாத்ரி தேவி மனிதனுக்கு பரமாத்மாவை அறிய வைக்கிறாள். சகல சௌபாக்கியங்களும் அள்ளிக் கொடுக்கும் சித்திதாத்ரி தேவி பக்தர்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கிறாள்.

கைலாயத்தில் சிவபெருமான் மஹா சக்தியை வழிபட்டு எல்ல ஸித்திகளையும் பெற்றார். அதற்கு நன்றிக் கடனாகத் தன்னுடய உடலில் பாதி பாகத்தை தேவிக்குக் கொடுத்தார். இதனால் சிவ பெருமனும், "அர்த்த நாரீஸ்வரர்" என்று புகழைடைந்தார். இந்த அவதார ரூபத்தை எல்லாக் கடவுளரும், ரிக்ஷிமுனிகளும், சித்தர்களும், யோகிகளும், பக்தர்களும் வழிபடுகிறார்கள்.

சித்தர்களுக்கும், ரிஷி, முனிவர்களுக்கும், அஷ்ட சித்திகளும் அளிக்க வல்லவள் இவள். அணிமா, மகிமா, கிரிமா, லகிமா, ப்ராப்தி, பரகாம்யம், ஈஷித்வம், வாஷித்வம் என்னும் அட்டமாசித்திகளை அளிப்பதால் இவளுக்கு சித்தாத்ரி எனப் பெயர் ஏற்பட்டது. நினைத்த காரியங்களில் சித்தியடையவும் இவளை வழிபடலாம்.

ஸித்த கந்தர்வ யக்ஷாத்யை: அஸிரைரபி |

ஸேவ்யமாநா ஸதாபூயாத் ஸித்திதா ஸித்திதாயிநீ ||

(சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், தேவர் கூட்டங்கள் எப்போதும் வழிபடும் சித்திதாயினி துர்க்கா அடியேனது எல்லா செயல்களிலும் வெற்றியை வழங்கட்டும்.)

நிர்குணா யா ஸதா நித்யா வ்யாபிகா அவிக்ருதா சிவா |

யோக கம்யா அகிலாதாரா துரீயா யா ச ஸம்ஸ்த்துதா ||


தஸ்யாஸ்து ஸாத்விகீ சக்தீ ராஜஸீ தாமஸீ ததா |

மஹாலக்ஷ்மி: ஸரஸ்வதீ மஹாகாளீதி ச ஸ்திரிய: ||

தாஸாம் திஸ்ருணாம் சக்தீதாம் தேஹாங்கீகார லக்ஷணாத் ||

படைக்கும் பிரம்மா, காக்கும் மஹா விஷ்ணு, சம்ஹாரிக்கும் சிவன் ஆகியோரின் சக்தியான மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி, மஹா காளி ஆகிய மூன்று சக்திகள் மேலும் மூன்று தேவிகளாக பிரிந்து நவதுர்க்கைகள் ஆயினர்.

சொர்ணாம்பாள்
இராஜராஜேஸ்வரி அலங்காரம்


திருமயிலை காமாக்ஷி அம்பாள்

நாகவாகனத்தில் பத்மாசனியாக தரிசனம்


காமாக்ஷி அம்பாளுடன் கொலுவிருக்கும்

மஹா சரஸ்வதி


குகையில் சிவலிங்கங்கள்



ரோக நிவாரணி அஷ்டகம்

ஜெயஜெய சைலா புத்திரி பிரஹ்ம

சாரிணி சந்தர கண்டினியே

ஜெயஜெய கூஷ் மாண்டினி ஸ்கந்த

மாதினி காத்யா யன்ய யளே

ஜெயஜெய கால ராத்ரி கௌரி

ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே || (8)

( நவ துர்க்கைகளின் நாமம் அவர்களது வர்ணத்தினாலேயே கூறப்பட்டுள்ளது )


அம்மன் அருள் வளரும்

Labels: , , ,

2 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

அருமையான நிறைவு ஐயா. ஒவ்வொரு சுலோகத்திற்கும் மந்திரத்திற்கும் பொருள் உரைத்தது அருமை. ஸ்தோத்ரமாலாவில் இடுவதற்காகச் சேமித்து வைத்துக் கொள்கிறேன்.

அப்படியே முடிந்த போது கூடலில் இருக்கும் இந்த இடுகைக்கு வாருங்கள். http://koodal1.blogspot.com/2010/10/blog-post.html

8:05 PM  
Blogger S.Muruganandam said...

அடியேனுக்காக ஒரு தனிப் பதிவா? மிக்க நன்றி குமரன் ஐயா.

தங்களைப்போன்ற அன்பர்களின் ஆதரவினால்தான் இன்னும் சமயம் இல்லாதபோதிலும் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தங்களுக்கும் மற்றும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

3:38 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal