Tuesday, October 07, 2008

அன்னையின் நவராத்திரி அலங்காரம் 9

நவராத்திரியின் நிறை நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை.
மஹா நவமி நாளான இன்று அன்னையை கலைகளின் தாயாகிய சரஸ்வதி தேவியாய் அம்பிகை திகழ்கின்றாள். நாத வீணை தாங்கி, வெள்ளை கலை உடுத்து வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சகல கலா வல்லி சொரூபமாக இன்று தேவியை அலங்கரித்து தியானித்து பூஜிக்க கல்வி ஞானம் பெருகும், உத்யோக உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.


மஹா நவமியான இன்று முழு மனத்துடன் ஸ்ரீ சக்ரத்தின் மத்தியில் அம்பாளை தியானித்து ஸ்ரீ லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள் அந்த அன்னையின் திருவடிகளை அடைவர் என்பது திண்ணம்.

Saradambal in Chariot
திருத்தேரில் சாரதாம்பாள்

Mahisasuramardini Alangaram
மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

Saradambal as Durga
சாரதாம்பாள் துர்க்கா அலங்காரம்

Maha Saraswathi -2
மஹா சரஸ்வதி


Maha Saraswathi Alangaram -1
மஹா சரஸ்வதி அலங்காரம்


ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யா

ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸுதாம்சு ஸமவிக்ரஹாம்
ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் கரை:
பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதி தேவதாம்
பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி: பாமினீம் பரமேஷ்டின:

சதுர்புஜாம் சந்த்ரவர்ணாம் சதுராரன வல்லபாம்
நமாமி தேவி வாணீத்வாம் ஆச்ரிதார்த்த ப்ரதாயினீம்

பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம:

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல் கையும்- துடி இடையுங்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி

5 Comments:

Blogger Kavinaya said...

வெள்ளைக் கமலத்திருப்பவளின் மென்பஞ்சுத் திருவடிகள் சரணம்!

7:03 PM  
Blogger S.Muruganandam said...

சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் கவிநயா.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வந்து தரி்சனம் பெற்றது மட்டுமல்லாமல் அன்னையின் அழகைப்பற்றி கூறியதற்கு அந்த மஹா திரிபுர சுந்தரி தங்களுக்கு அனைத்து செல்வங்களையும், வளங்களையும், நன்மைகளையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

ஓம் சக்தி, ஒம் சக்தி, ஓம் சக்தி.

7:36 PM  
Blogger மெளலி (மதுரையம்பதி) said...

வழக்கம் போல படங்கள் அருமை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சரஸ்வதீ பூஜை, விஜய தசமி வாழ்த்துக்கள் ஐயா.

7:57 PM  
Blogger jeevagv said...

சரஸ்வதி பூஜை மற்றும் தசரா நல்வாழ்த்துக்கள் ஐயா.

8:15 PM  
Blogger S.Muruganandam said...

அன்பர்கள் அனைவருக்கும் அன்னை எல்லா வளங்களையும், நலங்களையும் வழங்க சரஸ்வதி பூஜை நன்னாளில் அன்னையிடம் பிரார்த்திக்கின்றேன்.

அன்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி் நல்வாழ்த்துக்கள்.

1:33 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

Powered by Blogger

Photo Blogs - BlogCatalog Blog Directory

More than a Blog Aggregator

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal